தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் ஆரம்ப தினத்தன்று இலங்கை ஏழு தங்க பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளது. இந்தப் போட்டி நேற்று கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமானது.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் பெண்களுக்கான போட்டியிலும் தங்க பத்கங்கங்களை இலங்கை பெற்றுள்ளது. 400 மீற்றர் ஆண்களுக்கான போட்டியில் தங்க பதக்கத்தை அருணா தர்ஷன பெற்றுக்கொண்டார்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கத்தை சாமலி குமாரசிங்க பெற்றார். தமசா டீ சில்வா என்ற வீரங்கனை பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தங்க பதக்கத்தை சரிது தசும் பெற்றார்.
பரிதி எறியும் போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கத்தை இந்திய வீரர் தர்ஷிதி சிங் பெற்றார். இதில் வெள்ளிப் பதக்கததை இலங்கையை சேர்ந்த பிரசன்ன ரணவக்க பெற்றுக்கொண்டார். வெண்கல பதக்கத்தை அஞ்சல பொன்சேகா பெற்றார்.
No comments:
Post a Comment