காணாமல்போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
காணாமல்போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தமது கீச்சகப் (டுவிட்டர்) பக்கத்தில் இந்தத் தகவலை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து, தமது திட்டங்கள் குறித்து விவரிக்கவுள்ளதாகவும், பணியகம் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற அவர்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் காணாமல்போனோர் பணியகத்தின் முதலாவது சந்திப்பு மே மாதம் 12ஆம் திகதி மன்னாரில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இரண்டாவது கூட்டம் மாத்தறையில் அடுத்த மாதம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment