வட மாகாண பட்டதாரிகள் 23 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த மூவருக்கும் இதன்போது நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment