வெசாக் தினத்தை முன்னிட்டு விஷேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள இவ் விஷேட ரயில் சேவைகள் களுத்துறை தெற்கு, வேயன்கொட, அநுராதபுரம், அலுத்கம, அவிஸ்ஸாவெல்ல மற்றும் ரம்புக்கண்னை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை புகையிரத திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையில்,
இன்று அதிகாலை 4.30 க்கு மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கும், காலை 6.30 க்கு களுத்துறையிலிருந்து மருதானைக்கும், காலை 7.40 க்கு மீண்டும் மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கும், காலை 9.20 க்கு களுத்துறை தெற்கிலிருந்து வேயன்கொடவிற்கும், பிற்பகல் 12.25 க்கு வேயன்கொடவிலிருந்து களுத்துறை தெற்கிற்கும், மாலை 3.20க்கு மீண்டும் களுத்துறையிலிருந்து மருதானைக்கும், இரவு 8.30 க்கு அலுத்கமவிலிருந்து மருதானைக்கும், மாலை 6.30 க்கு அநுராதபுரத்திலிருந்து கொழும்பிற்கும், 6.50 க்கு அவிஸ்ஸாவெல்லவிலிருந்து கொழும்பிற்கும், 10.45 க்கு ரம்புக்கனையிலிருந்து கொழும்பிற்கும் விஷேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை 30 ஆம் திகதி மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கு அதிகாலை 4.30 க்கும், களுத்துறையிலிருந்து மருதானைக்கு காலை 6.30 க்கும், மீண்டும் மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கு காலை 7.40 க்கும், களுத்துறை தெற்கிலிருந்து வேயன்கொடவிற்கு முற்பகல் 9.20 க்கும், வேயன்கொடவிலிருந்து களுத்துறை தெற்கிற்கு பகல் 12.25 க்கும், மீண்டும் களுத்துறையிலிருந்து மருதானைக்கு மாலை 3.20 க்கும், அலுத்கமவிலிருந்து மருதானைக்கு இரவு 8.30 க்கும், மருதானையிலிருந்து அலுத்கமவிற்கு முற்பகல் ஒரு மணிக்கும், அவிஸ்ஸாவெல்லவிலிருந்து கொழும்பிற்கு மாலை 8.50 க்கும், கொழும்பிலிருந்து அவிஸ்ஸாவெல்லவிற்கு முற்பகல் ஒரு மணிக்கும், கொழும்பிலிருந்து ரம்புக்கனவிற்கு முற்பகல் ஒரு மணிக்கும் ரயில் சேவைகள் இடம்பெறும்.
மே மாதம் முதலாம் திகதி மருதானையிலிருந்து அலுத்தகமவிற்கும், கொழும்பிலிருந்து அவிஸ்ஸாவெல்லவிற்கும் முற்பகல் ஒரு மணிக்கும் ரயில் சேவை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment