அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டாமை ஆரோக்கியமானதல்ல-பிரதியமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Saturday, April 28, 2018

அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டாமை ஆரோக்கியமானதல்ல-பிரதியமைச்சர் அமீர் அலி

முஸ்லிம்களின் அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின், வேறிடங்களில் ஏதொவொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்திறப்பு விழா நிகழ்வு நேற்று 27.04.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் முஸ்லிம்களின் அபாயாவை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாதென்று சொல்கின்ற ஒரு படித்த சமூகம் எமது மாகாணத்திற்குள்ளிருந்து வெளிச்செல்லுமாக இருந்தால் அது நல்ல செய்தியாக நான் பார்க்கவில்லை.
இந்த கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தலைவர்களும் விழிப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டிய தேவைப்பாடிருக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தேசியத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் இதற்கு சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இது கவலையாக இருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் நீண்ட வரலாறு கொண்ட எதிர்பார்ப்புடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்ற இந்தச்சூழலில், அபாயாவைப்பற்றி கதைக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்குகின்ற கற்ற சமூகமாக இருக்குமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளெல்லாம் தீர்ந்து விட்டது. இறுதியாகவுள்ள அபாயா பிரச்சனை தேசியத்தில் தள்ளப்பட்டுள்ளமை துரதிஷ்ட வசமாகும்.

எனவே, இந்த விடயத்தில் தேசியத்தில் மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அதிக கவனஞ்செலுத்தி, இந்த வேலைத்திட்டத்தில் தங்களுடைய பதிவுகளைச்செய்ய வேண்டியுள்ளது. இதைச்செய்யத் தவறுமாக இருந்தால் இன்னும் விஷ்வரூபமெடுத்து ஏனைய பகுதிகளில் ஒற்றுமையாகவுள்ளதை ஏதொவொரு சக்திகள் குழப்பி விடும். அந்த முனைப்பை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சாதிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஏறாவூர் பிரதேச செயலாளர் வை.யூசுப், பிரதியமைச்சரின் ஏறாவூர் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப், பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மிச் நகர் கிராத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று சகோதரர்கள் குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றமைக்காக அதிதிகளால் நினைவுச்சினம் வழங்கியதுடன், அவர்களது தந்தைக்கு பொன்னாடை போர்த்தியதுடன், அவர்களுக்கு குர்ஆனை கற்பித்த உலமாவும் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments:

Post a Comment