முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்துவந்த குறித்த சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதற்கமைய 73 வயதுடைய வயோதிபரை கைது செய்துள்ளதுடன், 08 வயதுடைய சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான வயோதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment