வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் புதிய தையல் போதனாசிரியர்கள் ஐவருக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட்குரே இன்று வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் ரூபினி வரதலிங்கம், கிராம அபிவிருத்தி திணைக்கள பதில்பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment