அதிபரை தாக்கி விட்டு மாணவன் தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

அதிபரை தாக்கி விட்டு மாணவன் தப்பியோட்டம்

மாணவன் ஒருவன் கடு­மை­யாக தாக்­கி­யதில் காய­ம­டைந்த அதிபர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் கிரிபத்­கொடை பகு­தியில் இடம்­பெற்­­றுள்­ளது. தாக்­கு­த­லில் காயமுற்றவர் களனி பில­பிட்­டிய ஜனா­தி­பதி மகா வித்­தி­யா­லய அதிபர் நீல் பிரியந்த என தெரி­ய­வந்­துள்­ளது. 

கல்­விச்­சுற்­றுலா ஒன்­­றிற்கு மாண­வர்கள் தயா­ராக இருந்த நிலையில் 11 வய­து­டைய ஒரு மாண­வனின் பையை அதிபர் பரிசோதிக்க முயன்­றி­ருக்­கிறார். அச்­­சந்­தர்ப்­பத்தில் குறித்த மாணவன் அதிபர் மீது தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளார். 

இது குறித்து பொலிஸார் தெரி­விக்­கையில் குறித்த பாட­சா­லை மாண­வர்கள் கல்விச்­சுற்­றுலா செல்­வ­தற்கு தயா­ரான நிலையில் அவர்­க­ளது பைகளில் தடை செய்­யப்­பட்ட போதை பொருட்கள் எதுவும் இருக்கலாம் என்ற சந்­தே­கத்தில் அவ­ர்க­ளது பைகளை பரிசோதிக்கும் படி அதிபர் உத்­த­ர­விட்­டுள்ளார். குறித்த மாணவர் அதற்கு அனு­மதி தராது சுற்­றுலா பஸ்ஸில் ஏற முற்­பட்­டி­ருக்­கிறார். 

இதை­ய­டுத்து ஆசி­ரி­யர்­களின் முறைப்­பாட்­டினால் அவ்­விடம் வந்த அதிபர் மாண­வ­னின் பையை பரி­சோ­திக்க முற்­பட்­ட­போது திடீ­­ரென அம்­மா­ணவன் அதி­பரை சர­மா­ரி­யாக தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச்­செ­ன்­றுள்ளான். இது குறித்து விசா­ர­ணை­களை பொலிஸார் முன்­­னெ­டுத்து வரு­கின்­றனர்.

No comments:

Post a Comment