மாணவன் ஒருவன் கடுமையாக தாக்கியதில் காயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமுற்றவர் களனி பிலபிட்டிய ஜனாதிபதி மகா வித்தியாலய அதிபர் நீல் பிரியந்த என தெரியவந்துள்ளது.
கல்விச்சுற்றுலா ஒன்றிற்கு மாணவர்கள் தயாராக இருந்த நிலையில் 11 வயதுடைய ஒரு மாணவனின் பையை அதிபர் பரிசோதிக்க முயன்றிருக்கிறார். அச்சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன் அதிபர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.
இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் குறித்த பாடசாலை மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்வதற்கு தயாரான நிலையில் அவர்களது பைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எதுவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களது பைகளை பரிசோதிக்கும் படி அதிபர் உத்தரவிட்டுள்ளார். குறித்த மாணவர் அதற்கு அனுமதி தராது சுற்றுலா பஸ்ஸில் ஏற முற்பட்டிருக்கிறார்.
இதையடுத்து ஆசிரியர்களின் முறைப்பாட்டினால் அவ்விடம் வந்த அதிபர் மாணவனின் பையை பரிசோதிக்க முற்பட்டபோது திடீரென அம்மாணவன் அதிபரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளான். இது குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment