விமல் வீரவன்சவின் மகள் செய்த காரியம் - ஆச்சரியத்தில் அரசியல்வாதிகள் - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

விமல் வீரவன்சவின் மகள் செய்த காரியம் - ஆச்சரியத்தில் அரசியல்வாதிகள்

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று தனது தந்தைக்கான கலங்கத்தை அகற்றியதுடன், பெருமையையும் சேர்ப்பித்துள்ளார்.

விமாசா விஷ்வாதாரிக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்துள்ளதோடு, அரசியல் பிரதிநிதிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாடசாலை கல்வியினை நிறைவு செய்யவில்லை என்று அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் கல்வியினை நிறைவு செய்யவில்லையாயின் அதனை நிரூபிக்குமாறும் கூறியிருந்தார். அத்துடன், அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தாம் அரசியல் வாழ்க்கையை துறந்து செல்வதாகவும் அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வொன்றின் போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விமல் வீரவன்ச சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பவங்களை பார்வையுற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட அவரது மகள் சாதாரண பரீட்சைக்கு தோற்றி அதிசித்திகளைப் பெற்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment