பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் - ஆனந்த சங்கரி - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் - ஆனந்த சங்கரி

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி நேற்று (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியைச் சார்ந்த அனைத்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடைபெறவிருக்கும் ஏனைய உள்ளூராட்சி மன்ற தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுகளில் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க கூடாது. அதனையும், மீறினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகளே மேற்கொள்ள நேரிடும் என ஆனந்த சங்கரி அறிக்கையொன்றின் ஊடாகங்களினூடாக எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment