குருநாகல் மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2018

குருநாகல் மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டம்

குருநாகல் மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீடமைப்புத் திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த வீட்டு வசதியற்றவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.

25 வீடுகளை உள்ளடக்கிய 40 வீடமைப்பு திட்டங்கள் இதன் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன. அரச மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான கடன் திட்டத்தின் கீழ் ஐந்து இலட்சம் ரூபாவும், வறிய குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபா உதவித் திட்டத்தின் கீழும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment