தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் வட,கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மற்றும் அவரது தமிழர் சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலையான வரதராஜப்பெருமாள்,
"தமிழர் சமூக ஜனநாயக கட்சி சார்பாக மட்டக்களப்பு மாநகர சபையில் போட்டியிடும் உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசும் விநியோகம் செய்தபோதே பொலிஸார் எம்மை கைது செய்தனர்.
எங்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக பொலிஸாருக்கு விளக்கமளித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு எமது கைது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்தே நாம் விடுவிக்கப்பட்டோம்
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் புதிய சட்டதிட்டங்கள் தொடர்பிலும், தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலும் பொலிஸாருக்கு முறையான அறிவுறுத்தல்களை தேர்தல்கள் திணைக்களம் மேலும் வழங்கவேண்டும்" என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment