தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்காக 250 கோடி ரூபா நிதி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்காக 250 கோடி ரூபா நிதி

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்காக 250 கோடி ரூபா நிதி நேற்று முன்தினம் (29) ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

விவசாய சமூகத்தினருக்கு உரத்தை பெற்றுக் கொள்வதற்கு வங்கிகளுக்கு நிதி கிடைக்கப் பெறவில்லை என்று தனக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் தான் நிதியமைச்சில் அது குறித்து கேட்டறிந்ததன் பின்னர் அன்றைய தினமே அந்த நிதியை குறித்த வங்கிகளின் விவசாய சமூகத்தினரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்க பணிப்புரை வழங்கியதாக ஜனாதிபதி கூறினார்.

நேற்று (30) பிற்பகல் பொலன்னறுவை பெந்திவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கிராமிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன்மொழிவுகளும் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அபிவிருத்திக்கு தேவையான நிதியில் எந்தவித குறைபாடும் இல்லை என்றும், தேவையாக இருப்பது அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்கள் பிரதிநிதிகளே என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment