ஏறாவூரின் புதிய பிரதேச செயலாளராக வீ. யூசுப் இன்று கடமைகளை பொறுப்பேற்றார். - News View

About Us

About Us

Breaking

Thursday, November 30, 2017

ஏறாவூரின் புதிய பிரதேச செயலாளராக வீ. யூசுப் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூரின் புதிய பிரதேச செயலாளராக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த வீ. யூசுப் இன்று 30.11.2017ஆம்திகதி பிற்பகல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையில் 27 வருடங்கள் அனுபவங்களை கொண்ட சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான வீ. யூசுப், பல பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும், அரசின் பல்வேறு உயர் பதவிகளிலும் கடமை புரிந்த ஒருவராவார், கடைசியாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்த நிலையிலேயே ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கடமையேற்பு நிகழ்வில் பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி ரமீஸா, மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ரஹீம், கணக்காளர் நௌபீக் உட்பட பிரதேச செயலக அலுவலர்கள் கலந்து கொண்டு புதிய பிரதேச செயலாளரை வாழ்த்தி வரவேற்றனர்.

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.எம். ஹனீபா இந்த வருடம் மே மாதம் அளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளராக இடமாற்றம்பெற்று சென்றதை தொடர்ந்து இன்று புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்படும் வரை உதவிப் பிரதேச செயலாளராக இருந்த திருமதி ஏ.சி. ரமீஸா பதில் பிரதேச செயலாளராக தனது பணிகளை சிறப்புற முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

முகம்மட் அஸ்மி

No comments:

Post a Comment