கோல்ட் கோஸ்ட் கொமன்வெல்த் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்துகொள்ள இலங்கையால் முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு தேசிய ஜிம்னாஸ்டிக் சங்க அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட திகதியில் வீரர்களின் விண்ணப்பங்களை கொடுக்காததினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21ஆவது கொமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் இலங்கைக்கான வாய்ப்பு பறிபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment