சிறைச்சாலைக் கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மோதியதில் முதியவர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

சிறைச்சாலைக் கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மோதியதில் முதியவர் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு சிறைச்சாலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிறைச்சாலை பஸ்ஸில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பலியானதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் கறுவாக்கேணிப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 06.07.2021 இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் மீராவோடை தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த சின்னத்தம்பி இராமச்சந்திரன் (வயது 67) என்பவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்று கைதிகளை சிறைச்சாலையில் ஒப்படைத்து விட்டு அதிகாரிகளுடன் இரண்டு பஸ்கள் மட்டக்களப்பு சிறைச்சாலை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது மோதியுள்ளன.

சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை பஸ்வண்டிச் சாரதிகள் இருவர் கைது செய்யப்படுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த முதியவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment