X-Press Pearl கப்பலின் தொடர்பாடல் கட்டமைப்பை பகுப்பாய்வு செய்வதற்காக மற்றுமொரு குழுவை நியமிக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கணினி குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிணங்க, கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து மாத்திரம் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, X-Press Pearl கப்பல் மூழ்கிக் கொண்டுள்ள கடற் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, கப்பலில் இருந்து கடலுக்கு எரிபொருள் கசிகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக இன்று (07) சுழியோடிகள் ஆய்வில் ஈடுடவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment