கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் தற்போது துரிதமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவு நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் வழிகாட்டலில் வாழைச்சேனை 04 மற்றும் வாழைச்சேனை 206 டீ கிராம சேவகர் பிரிவில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், கிராம சேவை அதிகாரி பி.எம்.றம்ளான், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக எஸ்.ஏ.எச்.ஏ.சனீறா, எம்.ஐ.பௌஸ் முகம்மட் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வாழைச்சேனை 04 கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி முத்திரை பெறும் 402 குடும்பங்களுக்கும், வாழைச்சேனை 206டீ கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி முத்திரை பெறும் 415 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவு வழங்கப்பட்டதாக சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment