கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால் நாளை (05.05.2021) நடைபெறவிருந்த விவாதம் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment