கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, நான்கு மாவட்டங்களில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டம்:
மஹரமக பொலிஸ் பிரிவு
பமுனுவ, ஹொன்னந்தர மற்றும் தெல்தர கிராம சேவகர் பிரிவுகள்
கம்பஹா மாவட்டம்:
கிரிந்திவெல பொலிஸ் பிரிவு
குட்டிவில கிராமசேவகர் பிரிவு
வவுனியா மாவட்டம்:
பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு
குருக்கள்புதுக்குளம் கிராமர் சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்:
எல்பிட்டிய பொலிஸ் பிரிவு
பல்லேகம, உடகம, புதிய நகரம் கிரமசேவர் பிரிவுகள்
பாணமுர பொலிஸ் பிரிவு
வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
வேவல்வத்தை பொலிஸ் பிரிவு
ரத்கம கிராம சேவகர் பிரிவு
No comments:
Post a Comment