கட்டாய தகனம் நிறுத்தம் ; ஒன்றுபட்டு வென்றெடுக்கப்பட்ட உரிமை! - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

கட்டாய தகனம் நிறுத்தம் ; ஒன்றுபட்டு வென்றெடுக்கப்பட்ட உரிமை!

கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்ய மட்­டுமே முடியும் என இலங்கை அர­சாங்கம் எடுத்த தீர்மானம் சுமார் 11 மாதங்­களின் பின்னர் முடி­வுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்கள் வர­லாற்றில் பதி­யப்­பட வேண்­டி­யவை. 

இத்தீர்­மானம் முஸ்லிம் மக்­க­ளையே அதிகம் பாதித்த போதிலும் அதற்­கெ­தி­ராக நாட்­டி­லுள்ள சகல இன மக்­களும் ஒன்­று­பட்டு போராடினர் என்ற செய்தி அழுத்திச் சொல்­லப்­பட வேண்­டி­ய­தாகும்.

முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரிப்­பது இஸ்­லா­மிய சமய அடிப்படையில் ஏற்­றுக்­ கொள்ள முடி­யாத ஒரு விட­ய­மாகும். ஆரம்பத்தில் இந்த விட­யத்தை ஒரு சாதா­ரண விட­ய­மா­கவே முஸ்லிமல்­லாத நபர்கள் கடந்து சென்­ற­போதும், அடுத்­த­டுத்து நடந்த சம்­ப­வங்கள் அவர்­க­ளது உணர்­வு­க­ளையும் உசுப்­பி­யது. 

குறிப்­பாக 20 நாள் குழந்­தையின் ஜனாஸா எரிக்­கப்­பட்ட சம்­பவம் முஸ்­லிம்­களை மட்­டு­மல்­லாது ஏனைய தரப்­பி­ன­ரையும் ஆத்திரத்திற்குள்­ளாக்­கி­யது. இந்த உணர்­வு­பூர்­வ­மான நிகழ்­வுகள் இலங்­கையின் அனைத்து இன மக்­க­ளையும் வீதியில் இறங்கிப் போராடச் செய்­தன. 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பகை­யு­ணர்­வுகள் வேரூன்­றி­யி­ருந்த போதிலும் அத­னையும் தாண்டி முஸ்­லிம்­களின் அடிப்­படை உரிமை ஒன்­றுக்­காக சக­லரும் வேறுபாடு­களை மறந்து போரா­டி­யமை மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.

கபன் சீலை போராட்டம்
20 நாட்­க­ளே­யான குழந்தை ஷாயிக்கின் உடல் அவ­ரது பெற்­றோரின் விருப்­பத்­திற்கும் முர­ணாக எரிக்­கப்­பட்ட சம்­பவம் இளம் சமூக ஆர்வல­ரான அஞ்­சுல ஹெட்­டி­கேவை கடு­மை­யாகப் பாதித்­தது. அதுவரை சமூக வலைத்­த­ளங்­களில் மாத்­தி­ரமே இது­பற்றிப் பேசி வந்த அஞ்­சுல, தனது நண்­பர்கள் சில­ரையும் அழைத்துக் கொண்டு பொரளை தகனச் சாலையின் வேலியில் வெள்ளைத் துணி­களைக் கட்டி தனது எதிர்ப்­பையும் முஸ்­லிம்கள் மீதான ஒரு­மைப்­பாட்­டையும் வெளிப்­ப­டுத்­தினார். 

பல்­வேறு வழி­க­ளிலும் போராடி சோர்ந்து போயி­ருந்த முஸ்லிம்களுக்கும் இந்த வெள்ளைத் துணி போராட்டம் ஓர் உத்வேகத்தைக் கொடுத்­தது. அஞ்­சு­லவைப் பின்­பற்றி மேலும் பல நூற்றுக் கணக்­கா­னோரும் பொரளை தகனச் சாலை வேலியில் வெள்­ளைத் ­து­ணி­களைக் கட்ட ஆரம்­பித்­தனர். 

பௌத்த, கிறிஸ்­தவ, இந்து மக்­களும் படை­யெ­டுத்து வந்­தனர். பின்னர் இது நாட­ளா­விய ரீதியில் ஓர் இயக்­க­மாகப் பரி­ண­மித்­தது. ஆயிரக் கணக்­கானோர் பொது இடங்­க­ளிலும் தமது வீடு­க­ளிலும் வெள்­ளைத் ­து­ணி­களைக் கட்டி அவற்றைப் புகைப்­ப­ட­மெ­டுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பகிரத் தொடங்­கினர்.

பொரளை தகன மயா­னத்தில் வெள்­ளைத்­ துணி ஒன்றை கட்­டிய சட்ட­த்த­ரனி லிஹினி பெர்­னாண்டோ (Women) கருத்து தெரிவிக்கையில், “கொரோனா எல்­லோ­ருக்­கு­மான பொது­வான அனர்த்தம், இதை ஒரு சந்­தர்ப்­ப­மாக வைத்­துக்­ கொண்டு மோதல்களை தோற்­று­விப்­பது நல்­ல­தொரு விட­ய­மல்ல. 

முஸ்­லிம்­களின் உடல்­களை அடக்கம் செய்­வதால் விஞ்­ஞான ரீதியான ஆபத்­துக்கள் இல்லை என்றே அனைத்து தரப்­பி­னர்­களும் ஒப்­பு­விக்­கி­றார்கள். அதைத் தடை­யின்றி அமுல்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமை. 

நாட்டின் பெரும்­பான்மை இனத்தவர்களாகிய நாம் அதற்­காக அரசாங்­கத்­திற்கு வேண்டுகோள்­களை விடுக்க வேண்டும். எல்லா நம்பிக்கையாளர்களின் உணர்­வு­க­ளையும் மதிக்கும் ஒரு நாட்டில் வசிக்­கத்தான் நான் ஆசைப்­ப­டு­கிறேன்” என தெரி­வித்தார்.

வெள்ளைத் துணி அல்­லது கபன் சீலைப் போராட்­டத்தை மேலும் விரிவ­டையச் செய்­வதில் பெரிதும் பங்­க­ளிப்பு வழங்­கி­யவர் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி ஸாஹிர் மௌலானா. 

அவர் இது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில், “மதங்­களைத் தாண்டி மனித நேய­முள்ள பல மனி­தர்கள் பொர­ளைக்கு வந்து வெள்ளைத் துணி­களைக் கட்­டி­னார்கள். கிறிஸ்­த­வர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்­துக்கள் என அனை­வரும் இதற்­காக களமிறங்­கி­னார்கள். 

டுவிட்டர் மூலம் இது தொடர்­பாக பேசி­ய­போது ஏரா­ள­மான முஸ்லிமல்­லாத சகோ­த­ரர்கள் காத்­தி­ர­மான கருத்­துக்­களை முன்வைத்து, முஸ்­லிம்­களின் உணர்­வு­களில் பங்­கெ­டுத்­தார்கள். இப்போது தகனம் நிறுத்­தப்­பட்­டாலும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் மன வேத­னைக்கு அர­சாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்­கை­களைக் கூட பலர் முன் வைக்கிறார்கள். பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் கூட காத்­தி­ர­மான விவா­தங்­களை பலர் முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள்” என்றார்.

பி.2.பி போராட்டம்
தமிழ் பேசும் சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்­கையை மையப்­ப­டுத்தி பொத்­துவில் முதல் பொலி­கண்டி வரை ஒரு நடைப்­பே­ரணி பெப்­ர­வரி நான்கில் ஆரம்பித்து ஏழாம் திகதி நிறை­வ­டைந்­தது. 

இதில் கட்­டாய தக­னத்­தினை நிறுத்தும் கோரிக்­கையும் பிர­தான அம்­ச­மாகும். இப் போராட்­டத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சாணக்­கியன் முன்னெடுத்திருந்தார்.

இந்தப் பேர­ணியில் பங்­கேற்ற தமிழ் மக்கள் கட்­டாய தக­னத்­தினை எதிர்த்து குரல் கொடுத்­தமை வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் உறவில் புதிய அத்­தி­யா­யத்­திற்கு வித்­திட்­டது எனலாம்.

இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்டம் காத்­தான்­கு­டியை கடந்­து­செல்லும் போது எம்.ஏ. சுமந்­திரன் எம்.பி. இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் செறிந்து வாழும் காத்­தான்­கு­டியில் திர­ளாக வந்து ஆத­ர­வ­ளித்­த­மைக்­காக நன்றி தெரி­வித்­த­தோடு “எப்­ப­டி­யாக ஜனாஸா எரிப்­பிற்கு எதி­ராக நாங்கள் குரல் கொடுக்­கின்­றோமோ அதேபோல தமிழ் மக்­க­ளு­டைய எல்லா அர­சியல் உரி­மை­களும் மீறப்­ப­டு­வ­தற்கு எதி­ராக நீங்­களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” எனக் கேட்­டுக்­ கொண்டார்.

‘எரிக்­காதே எரிக்­காதே, ஜனா­ஸாக்­களை எரிக்­காதே’ என்ற கோஷத்துடன் புறப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன், முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யக்­கூ­டாது என்று உரத்த குரலில் பேசினார். 

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த அவர், “முஸ்­லிம்கள் உடல்கள் தகனம் செய்­யப்­ப­டு­கின்­றன, வடக்கு கிழக்­கிலும் மலை­ய­கத்­திலும் வாழு­கின்ற தமி­ழர்கள் உரிமை இழந்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இவற்­றுக்கு எதி­ராக இந்­தப்­போ­ராட்­டங்கள் தொடரும்” என்றார். அதுமாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்­றத்­திலும் அவர் ஜனாஸா எரிப்­புக்கு எதி­ராக குரல் கொடுத்தார். 

முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய அனு­ம­திக்க வேண்டும் என வலி­யு­றுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் பாராளுமன்றில் ஆற்­றிய உரை­களும் முக்­கி­யத்­து­வம் ­வாய்ந்­தவை.

மத­ கு­ருக்களின் குரல்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை முன்­னி­றுத்தி பெளத்த பிக்கு­களில் ஒரு­ சாரார் சக­லரின் உடல்­களும் எரிக்­கப்­பட வேண்டும், முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் விதி­வி­லக்­க­ளிக்க முடி­யாது என போர்க் கொடி தூக்­கி­யி­ருந்­தனர். இதற்­காக பல ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடாத்­தினர். அரச உயர்­மட்­டத்­திற்கு அழுத்­தங்­க­ளையும் வழங்­கினர். 

எனினும் ஒரு பௌத்த மத­குரு முஸ்­லிம்­க­ளுக்­காக மன­மி­ரங்கிக் குரல் கொடுத்தார். பொக­வந்­த­லாவை ராஹுல தேரர் எனும் இளம் மத­கு­ருவே இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுத்­தவர் ஆவார்.

இவர் எங்­க­ளிடம் கருத்து தெரி­விக்­கையில், “இறந்­த­வர்­களின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்­வது அவர்­க­ளது கடமை. அந்த உரி­மையை இல்­லா­ம­லாக்­கு­வது பாவ­மான செய­லாகும். நான் இதற்­காக குரல் கொடுத்­த­போது எனக்கு பல்­வேறு தரப்பில் இருந்து அழுத்­தங்கள் வந்­தன. நான் அதைப்­பற்­றி­யெல்லாம் கணக்கில் கொள்­ள­வில்லை. 

எனது மனதை ஒருவர் நோக­டிக்­கும்­போது எனக்கு எப்­படி வலிக்குமோ அதே போலதான் இன்­னொரு சகோ­த­ரரின் மனதை நோக­டிக்­கும்­போது எனக்கு வலிக்கும். புத்த தர்­மத்தின் போதனைகளை புரிந்து கொள்­ளாமல் யாரா­வது பேசினால் எப்­படி எனக்கு வலிக்­குமோ, அதே­போல்தான் யாரா­வது முஹம்­மது நபியின் போத­னை­களைப் புரிந்­து­கொள்­ளாமல் நடந்­து­கொண்டால் அவர்களுக்கு வலிக்கும்’ என்றார்.

கட்­டாய தக­னத்­திற்கு எதி­ராக ராஹுல தேரர் பேஸ்­புக்­கில பிர­சாரம் மேற்­கொள்­ளும்­போது, பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்டார். வெவ்­வேறு மத­கு­மார்கள் உட்­பட பல்­வேறு தரப்­பினர் தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தனர். 

ஆனால், அவற்றை எல்லாம் துச்­ச­மாக மதித்து ராஹுல தேரர் தொடர்ச்­சி­யாக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தார். இத­னூ­டாக தமிழ் பேசும் சமூ­கத்தின் மத்­தியில் ராஹுல தேரர் அதி­க­மாக பேசப்பட்டதுடன் அவர்­களின் அன்­பையும் ஆத­ர­வையும் பெற்றார்.

இந்து மத­கு­ரு­வான தவத்­தி­ரு­வேலன் சுவாமி பி2பி போராட்­டத்தில் முழு­மை­யாகப் பங்­கேற்ற ஒரு­வ­ராவார். இவர் போராட்­டத்தின் பல இடங்­க­ளிலும் ஜனாஸா எரிப்­புக்கு எதி­ராக குரல் கொடுத்தார். 

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த அவர், “முஸ்லிம் சகோ­த­ரர்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டு­வது நியா­ய­மற்ற செய­லாகும்” என தெரிவித்தார்.

அதேபோன்று பல கிறிஸ்தவ பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கூட பொரளை தகனச் சாலைக்குச் சென்று வெள்ளைத் துணிகளை கட்டியதையும் இந்த இடத்தில் நினைவுப் படுத்த வேண்டும்.

மனித உரிமை ஆர்­வலர் தெரி­விப்­பது என்ன?
கட்­டாய தக­னங்­களை அர­சாங்கம் அறி­முகம் செய்­த­போது அதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனு ஒன்றை முதன் முத­லாக பதிவு செய்­தவர் மனித உரிமை ஆர்­வலர் ஷிரீன் ஸரூர் ஆவார். 

அடிப்­படை உரிமை மனு தாக்கல் செய்­யப்­பட்­டது முதல் கட்­டாய தகனம் முடி­வுக்கு கொண்­டு­வரும் வரை பல்­வேறு சமயவத்தவர்களுடன் இணைந்து உயி­ரி­ழந்த ஜனா­ஸாக்­களின் குடும்­பத்­தி­னர்­க­ளுக்கு உத­வி­களைச் செய்தார். 

ருகி பெர்­னாண்டோ மற்றும் இளங்­கோவன் போன்ற மனித உரிமை ஆர்­வ­லர்­களை இணைத்­துக்­ கொண்டு அடிப்­படை உரிமை தொடர்பான வேலை­களில் ஈடு­பட்டார்.

“வெள்­ளைத்­ து­ணி­களை கட்­டு­வ­தற்கு முற்­ப­டும்­போது, அதி­க­மாக சிங்­க­ள­வர்­களே எங்­க­ளோடு கைகோர்த்­தார்கள். சிங்­கள இளைஞர்கள் மற்றும் யுவ­திகள் இது ­பற்­றிய தமது கருத்­துக்­களை ஊட­கங்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக முன்­வைத்­தார்கள். சமூக ஊடகங்களில் நேரடி ஒளி­ப­ரப்­பு­களை செய்­தார்கள். இவை மக்கள் மத்­தியில் பெரும் தாக்­கத்தைச் செலுத்­தின” என ஷிரீன் தெரிவிக்கிறார்.

“முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி நடக்­கி­றது என்­பதை தெரிந்து கொண்ட சிங்கள வைத்­தி­யர்கள் எங்­க­ளோடு இணைந்து செயற்­பட்­டார்கள். அத்­துடன் முஸ்­லி­மல்­லாத சட்­டத்­த­ர­ணி­கள்தான் மனுக்­களை தாக்கல் செய்­யவும் உயர் நீதி­மன்ற கட­மை­களைச் சரி­வர செய்­யவும் துணை­யாக இருந்­தார்கள். 

சுமந்­திரன், புலஸ்தி ஹேம­மாலி, விரான் கொரியா போன்ற சட்டத்தரணிகள் இன, மத வேறு­பா­டுகள் எது­வு­மின்றி இல­வ­ச­மாக செயற்­பட முன்­வந்­தார்கள் என ஷிரீன் தெரி­விக்­கிறார்.

அதே­போன்று உயி­ரியல் நிபு­ணர்­க­ளான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதாரண, பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் போன்ற நிபு­ணர்கள் கொவிட் தொற்­றுக்­குள்­ளான சட­லங்­களை அடக்கம் செய்­வதால் நிலத்­தடி நீர் மாச­டை­யாது என விஞ்­ஞான ரீதி­யாக முன்­வைத்த கார­ணங்­களும் தேசிய ஊட­கங்­களில் முக்­கிய இடம்­பி­டித்­தன. 

இவ்­வா­றான நிபு­ணர்­களின் துணிச்­ச­லான கருத்­துக்­களும் அரசாங்கத்தின் நிபுணர் குழு­வுக்கு பாரிய அழுத்­தங்­களைப் பிரயோகித்­தன. இதுவும் அடக்கம் செய்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கு­வதில் செல்­வாக்குச் செலுத்­தி­யதை மறுக்க முடி­யாது.

முன்­மா­திரி தொடர வேண்டும்
கட்­டாய தக­னத்­தினால் அதிகம் பாதிக்­கப்­பட்­டது முஸ்­லிம்­க­ளாக இருந்த போதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு அடக்கம் செய்யும் உரி­மையைப் பெற்றுக் கொடுக்க சகல சமய, சமூ­கத் ­த­வர்­களும் ஒன்­று­பட்டுப் போரா­டினர். இது தற்­போ­தைய இன­வாத சூழலில் மிகச் சிறந்த முன்மா­தி­ரி­யாகும். 

இது­வரை ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் 70 க்கும் அதி­க­மான சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றுள் 2 கத்­தோ­லிக்­கர்­களின் சடலங்­களும் 1 பெளத்­தரின் சட­லமும் உள்­ள­டங்­கு­கின்­றன என்­பது இப்போராட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி தமது உற­வு­களை அடக்கம் செய்ய விரும்­பிய சக மத்­த­வர்­க­ளுக்கும் கிடைத்த வெற்றியு­மாகும்.

ஒரு சமூ­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­ப­டும்­போது பாதிக்­கப்­பட்ட சமூகம் மாத்­தி­ரமே தனித்து நின்று போராட வேண்டும் என்ற நிய­தி­யில்லை. மாறாக அநீ­திக்கு எதி­ராக சக­லரும் ஒன்­று­பட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்ற செய்தியையே கட்டாய தகனத்திற்கு எதிரான போராட்டம் நமக்குச் சொல்கிறது.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்திற்கும் இதில் ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. அதுதான் அடுத்த சமூகங்களின் உரிமைசார் பிரச்சினைகளின்போது ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்காது அவர்களோடு கைகோர்த்து போராட வேண்டும் என்பதாகும். அந்த செய்தியை முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள், உலமாக்கள், அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம்.

Vidivelli

No comments:

Post a Comment