மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு நோய் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு நோய்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச் 26ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 02ஆந் திகதி வரையும் 46 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளானவர்களில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 நோயாளர்களும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நோயாளர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 03 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாழைச்சேனை, ஏறாவூர் நகர், வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 நோயாளர்களும், காத்தான்குடி, கிரான், மண்முனைப்பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தம் 46பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ் வருடம் டெங்கு நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 03 எனவும், டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2391 எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment