புகையிரதம் தடம்புரண்டதில் நாவலப்பிட்டி - கண்டி சேவை பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

புகையிரதம் தடம்புரண்டதில் நாவலப்பிட்டி - கண்டி சேவை பாதிப்பு

கண்டி - நாவலப்பிட்டிக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

142 ஆம் இலக்க பயணிகள் ரயில் நாவலப்பிட்டி ஜயசுந்த ஓவிட்ட பகுதியில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்ட ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாவது பயணத்தை ஆரம்பிக்கவிருத்த குறித்த ரயில் எஞ்சின் பகுதி திருப்ப முற்பட்ட போதே இன்று (11) மதியம் 12.30 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது.

நாவலப்பிட்டி ரயில்வே ஊழியகர் திருத்தப்பணியின் ஈடுபட்டு வருவதுடன் பணி நிறைவடைந்தவுடன் மீண்டும் வழமை போல சேவை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment