பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பங்களாதேஷிற்கு இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று 2021.03.19 காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் வரவேற்பில் கலந்து கொண்ட பங்களாதேஷ் நாட்டு உயர்மட்ட தலைவர்களை அந்நாட்டு பிரதமர் செய்க் ஹசீனா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலங்கையின் உயர்மட்ட குழுவினரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு பிரதமருக்கும், ஏனைய தலைவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
பங்களாதேஷ் நாட்டின் 50 ஆவது சுதந்திர நிகழ்வு மற்றும் பங்களாதேஷ் நாட்டின் தேசப்பிதாவாக கருதப்படும் பங்கபந்து செய்க் முஜிபுர் ரஹ்மானின் 100ஆவது பிறந்த தின நிகழ்விலும் கலந்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பங்கபந்து செய்க் முஜிபுர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வினையும்,பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர கொண்டாட்டத்தையும் முன்னிட்டு அறிவித்துள்ள நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை நிகழ்த்தவும் உள்ளார்.
No comments:
Post a Comment