(எம்.நியூட்டன்)
அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றது என்பதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை நிராகரித்து தொற்று நோய் தடுப்பு, கொவிட் கட்டுப்பாட்டு விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவி்ககையில் இது மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடையம் பல தடவை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட போதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ பிரதமர் செயலகமோ உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும்.
ஜனாசாக்கள் எரிக்கப்படுமானால் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உறுதிப்படுத்தப்படும். எவ்வாறானாலும் இத்தகைய விடையங்களில் ஒருமித்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் குரல் கொடுக்கின்ற அத்தனை அமைப்புக்களும் பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
உடனடியாக ஜனாசா எரிப்பு திட்டத்தை கைவிட வேண்டும் இல்லை என்றால் முஸ்லிம் அனைத்துக் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் இணைந்து முஸ்லிம்களின் அனைத்து நாடுகளையும் கேட்க வேண்டும் எமது மத உரிமை மீறப்படுகின்றது இவற்றை சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமையில் முறையிட வேண்டும்.
ஏற்கனவே இவ்விடையம் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ளது இவ்விடையங்கள் முறைப்படி அரசாங்கம் செவிசாய்க்காது விட்டால் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment