வாடகை வாகனங்களை பெற்று விற்பனை செய்த குழு சிக்கியது - வாகனங்களை தொலைத்தவர்கள் இருப்பின் தொடர்புகொள்ள கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

வாடகை வாகனங்களை பெற்று விற்பனை செய்த குழு சிக்கியது - வாகனங்களை தொலைத்தவர்கள் இருப்பின் தொடர்புகொள்ள கோரிக்கை

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து வேறொரு தரப்பினருக்கு விற்பனை செய்யும் குழு தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இத்தரப்பினரால் போலியான அடையாள அட்டைகள் மற்றும் மின்சாரப் பட்டியலை வழங்குவதன் மூலம் வாகனங்களை வாடகைக்குப் பெற்று அவற்றை பகுதிகளாக விற்பனை செய்தல் அல்லது முழு வாகனத்தையும் விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது. இம்மோசடி சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள் யக்கல மற்றும் மிரிகம பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 17 போலியான வாகனங்களை முல்லேரியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்த எவரும் இருந்தால் முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று 17 வாகனங்களில் உங்களின் வாகனம் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து பார்க்க சந்தர்ப்பம் வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment