ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் பயணித்த பஸ் விபத்து 30 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் பயணித்த பஸ் விபத்து 30 பேர் காயம்

ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (09) காலை பொலன்னறுவையின் லங்காபுர பிரதேசத்திலுள்ள கேகலுகம பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் வீதியிலிருந்து விலகி பராக்கிரம சமுத்திர கிளை கால்வாய் ஒன்றில் வீழ்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் புலதிசிகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment