தற்காலிகமாக மூடப்பட்டது வெலிமடை நீதிமன்ற கட்டடத் தொகுதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

தற்காலிகமாக மூடப்பட்டது வெலிமடை நீதிமன்ற கட்டடத் தொகுதி

கொரோனா தொற்றாளர்கள் நீதிமன்றத்திற்கு வரக்கூடுமென்ற அச்சத்தினால், வெலிமடை நீதிமன்றத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெலிமடை மஜிஸ்திரேட் நீதிமன்றம், வெலிமடை மாவட்ட நீதிமன்றம் ஆகியனவே மூடப்பட்டுள்ளனவாகும்.

வெலிமடை நீதிபதி நதீரா போகாதெனிய விடுத்த உத்தரவிற்கமையவே, குறித்த நீதிமன்றங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க சார்பில் சேனக்க பண்டார தெரிவித்தார்.

நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள காலப் பகுதியின் வழக்குகள், அனைத்தும் நீதிமன்றங்கள் திறந்த பின்னர் மாற்றுத் திகதிகள் அறிவிக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment