சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஷா, குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவின் பணிப்பாளராக இருந்த அவர், தற்போது குறித்த பதவிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குற்றப்ப புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவு பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.
அது தவிர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டபிள்யூ.டி. தல்துவ, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவு பணிப்பாளர் பதவியில் இருந்து குற்றப் பிரிவு பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.
குற்றப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து, மாத்தறை பிரிவுக்கு, தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக டப்ளியூ.ஆர்.எல்.கே. கருணகலேகே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, சேவையின் தேவை கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மாஅதிபரினால் இவ்விடமாற்றங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment