பத்து மாத கைக்குழந்தைக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

பத்து மாத கைக்குழந்தைக்கு கொரோனா

ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

தற்போது அந்த குழந்தை IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்றே COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளது.

காய்ச்சல் காரணமாக இந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment