யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மினுவாங்கொட - பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியையடுத்து யாழ்ப்பாணத்தில் 8 பேர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment