கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனா

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கும் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இன்னொறு குழந்தையொன்றின் தந்தையொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

குறித்த பணியாளர் கடந்த தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்ட குழந்தை சிகிச்சை பெற்று வந்த விடுதியில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment