ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகளுடன் உறுதியாக நிற்க வேண்டும் - மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகளுடன் உறுதியாக நிற்க வேண்டும் - மங்கள சமரவீர

(நா.தனுஜா) 

இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக்கரத்தை நீட்டும் போது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளடங்கலான பெறுமதி வாய்ந்த கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகளுடன் உறுதியாக நிற்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கிறார். 

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையைத் தொடர்ந்து மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, "இரண்டாகப் பிளவுபட்டுச் செயலாற்றி வரும் உலகில், இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புக்கரத்தை நீட்டும் போது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளடங்கலான பெறுமதி வாய்ந்த கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகளுடன் உறுதியாக நிற்பது மிகவும் அவசியமானது என்பதுடன் அதுவே உண்மையான திறனுமாகும்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment