வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி - 40 க்கு மேற்பட்டோரை காணவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி - 40 க்கு மேற்பட்டோரை காணவில்லை

வியட்நாமில் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

வியட்நாமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. 

இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் நேற்று (28) மத்திய வியட்நாமில் கடும் சூறாவளி புயல் தாக்கியது. இதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

மலைப்பகுதியில் உள்ள டிரா வான் மற்றும் டிராங் லெங் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. 

இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 40 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment