LPL T20 தொடர் மேலும் இரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

LPL T20 தொடர் மேலும் இரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) ரி20 கிரிக்கெட் தொடரை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால், குறித்த போட்டி 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இப்போட்டியில் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் பங்கேற்பதால், அவர்களை 2 வாரகால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு நவம்பர் 14ஆம் திகதிக்கு போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.

இப்போட்டிக்கான விளையாட்டு வீரர்களை வகைப்படுத்தும் நடவடிக்கை நாளையதினம் (01) இணையத்தளம் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இப்போட்டித் தொடரில் பங்குபற்றும் 5 அணிகளில், காலி அணிக்கு மாத்திரமே இதுவரை உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment