ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 2, 2020

ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான்

தொடர்ந்தும் சிறையில் பிள்ளையான்...! | importmirror.com
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவினால், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் இன்று (03) காலை 9.45 மணிக்கு குறித்த பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் சிறையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக அவர் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் இன்று குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

No comments:

Post a Comment