அக்கரைப்பற்றில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 2, 2020

அக்கரைப்பற்றில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம். - Vanni News
அம்பாறை அக்கரைப்பற்று மொட்டையா மலையின் மேல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (02) மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று சாகாமம் வயல் பகுதியில் உள்ள மொட்டை மலையில் மேல் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை இன்று காலையில் கண்ட விவசாயிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உருக்குலைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment