அரசியலமைப்பின் 20 ஆவது சட்ட மூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 2, 2020

அரசியலமைப்பின் 20 ஆவது சட்ட மூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு சட்ட மா அதிபரிடம் கையளிப்பு - Newsfirst
(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைபிற்கும், வரைபினை வர்த்தமானியில் வெளியிடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19 ஆம் திருத்தத்தில் பிரதான விடயங்களாக காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம், பாராளுமன்றத்தின் பதவிக் காலம், மற்றும் தகவலறியும் உரிமை சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கான மூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்ட மூல வரைபிற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்ற சட்ட மூல வரைபினை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்றும் மட்டுப்பாடு விதிக்கப்பட்டன. தகவலறியும் உரிமை சட்டம் வலுப்படுத்தப்பட்டது.

இவ்விடயங்களை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முழுமையாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதற்கு அமைய அவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

சட்ட மூல வரைபு தொடர்பான உப குழுவினரால் தயாரிக்கப்பட்ட சட்ட மூல வரைபு சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டு சட்ட மூல வரைபு பரிசீலனை செய்யப்பட்டது.

அரசியலமைப்பின் 83 ஆவது பிரிவிற்கு அமைய பொதுஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய விடயங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூல வரைபில் குறிப்பிடப்படவில்லை.

அதாவது ஜனாதிபதி, பாராளுமன்றம் ஆகியவற்றின் பதவிக் காலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

ஆகவே அரசியலமைப்பின் 83 ஆவது உப பிரிவுக்கு அமைய பாராளுமன்றத்தின் மூன்றில் இர்ணடு பெரும்பான்மையுடன் 20 ஆவது சட்ட மூல வரைபு நிறைவேற்றப்பட வேண்டும் என சட்டமா அதிபர் நீதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சரவையில் நீதியமைச்சரினால் சட்ட மூல வரைபு சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

20 ஆவது அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான சட்ட மூல வரைபு இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இம்மாதமே நிறைவேறறிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment