8 லட்சத்து 34 ஆயிரத்து 772 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, August 27, 2020

8 லட்சத்து 34 ஆயிரத்து 772 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

தமிழகத்தை புரட்டி எடுக்கும் கொரோனா.. திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி..! - Seithipunal
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 93 ஆயிரத்து 991 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 396 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 772 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,84,778
பிரேசில் - 1,18,726
மெக்சிகோ - 62,076
இந்தியா - 60,472 
இங்கிலாந்து - 41,477
இத்தாலி - 35,463
பிரான்ஸ் - 30,576
ஸ்பெயின் - 28,996
பெரு - 28,124
ஈரான் - 21,137

No comments:

Post a Comment