அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் ஒரே தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 29, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் ஒரே தலைவர்

உயர் நீதிமன்றம் நீதியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் -அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பதவியேற்றதை தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். 

முன்பதாக 1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாதம் 10ஆம் திகதி இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாணத்தில் பிறந்த டக்ளஸ் தேவானந்தா, தனது கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றிருந்தார். 

ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்ப கால போராளிகளில் முக்கிய ஒருவராக திகழ்ந்ததுடன் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தளபதியாகவும் டக்ளஸ் தேவானந்தா விளங்கினார். 

பின்னாளில் ஒரு சிலரின் தவறான வழிநடத்தல்களால் ஆயுதப் போராட்டம் திசைமாறி சென்றமையால் 1987 களில் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறினார். 

இந்நிலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதற்தடவையாக யாழ் - கிளிநெச்சி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தார். 

அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாகவும் வெற்றி பெற்று தமிழ் மக்களின் தோற்றடிக்கப்பட முடியாத ஏக பிரதிநிதியாக பாராளுமன்றுக்கு சென்றார் டக்ளஸ் தேவானந்தா. 

இக்காலப்பகுதிகளில் பல்வேறு அமைச்சுக்களை பொறுப்பேற்று தமிழ் மக்களின் துயர் நிறைந்த காலங்களில் பெரும்பணியாற்றிவருவதுடன் நல்லிணக்கம் இன நல்லுறவு போன்றவற்றின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகின்றார். தமிழ் மக்களின் ஏக அரசியல் தலைவராக மட்டுமல்லாது தென்னிலங்கை பெரும்பான்மை மக்களினதும் நம்பிக்கைக்குரியவராகவும் காணப்படுகின்றார். 

குறிப்பாக 2000ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து கலாசார அமைச்சராக பொறுப்பேற்று அளப்பெரிய பணியாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2001 ஆண்டு தமிழ் விவகாரங்கள், வடக்கு மற்றும் கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மக்களின் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்கை ஏற்றிவைத்தவராகவும் டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார். 

அத்துடன் 2005 ஆண்டு இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அன்று ஜனாதிபதியாக இருந்தபோது சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் அமைச்சராகவும் அதன்பின்னர் யுத்தம் நிறைவுற்று நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்ட பின்னரான காலப்பகுதியில் 2010 ஆம் ஆண்டின் அமைச்சரவையில் பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறு நிறுவன மேம்பாடு அமைச்சராகவும் பொறுப்பேற்று தமிழ் மக்களுக்கு அளப்பெரிய பணியாற்றியுள்ளதுடன் இன்று வடபகுதியில் காணப்படும் எண்ணற்ற அபிவிருத்திகள் அனைத்துக்கும் ஏக உரித்தாளராகவும் காணப்படுகின்றார். 

இதன் பின்னர் 2019 ஆண்டு இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியானதும் அவரது தலைமையில் உருவான காபந்து அரசில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராகவும் பெறுப்பெற்றிருந்தார். 

இந்நிலையில் 2020 ஆண்டு நடந்துமுடிந்த தேர்தலில் தொடர்ந்து ஏழாவது தடவையாக தமிழ் மக்களின் தோல்வி காணாத தமிழ் தலைவராக பாராளுமன்றம் சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா, மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment