(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலுக்கு முன்னர் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும். ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கும், நிராகரிப்பதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமற்றது. ஜனாதிபதியே இறுதித் தீர்மானத்தை எடுப்பார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் இரகசிய தன்மையை பேணியது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒப்பந்தத்தின் முதலிரு பகுதிகள் கைச்சாத்திடப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட நிதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவ்விடயங்கள் ஏதும் அக்காலக்கட்டத்தில் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் பேசப்படவில்லை.
எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய மீளாய்வு குழுவினர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி மாதம் நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
குழுவினர் மீளாய்வு அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (25) ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்கள். மீளாய்வு அறிக்கையினை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதற்கு இணங்க மீளாய்வு அறிக்கை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். ஒப்பந்தை கைச்சாத்திடவும், நிராகரிக்கவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு ஒன்றும் அவசியமில்லை. ஜனாதிபதியே இறுதித் தீர்மானத்தை எடுப்பார்.
No comments:
Post a Comment