அயர்லாந்து நாட்டின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தெரிவு செய்யப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

அயர்லாந்து நாட்டின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தெரிவு செய்யப்பட்டார்

அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். மேலும மைக்கேல் மார்ட்டின் வருகின்ற 2022 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருப்பார்.

அயர்லாந்து நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் சிக்கல் எழுந்தது. 

கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதற்காக நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளான பியானா பெயில் மற்றும் பைன் கெயில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில் பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்றது. பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

கீழ் அவையில் மொத்தமுள்ள 160 உறுப்பினர்களில் 93 பேர் மைக்கேல் மார்ட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 63 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். 3 பேர் வாக்கெடுப்புக்கு வரவில்லை. கிழவியின் சபாநாயகருக்கு வாக்கு போடும் அதிகாரம் கிடையாது. 

இதன் மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. 15 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 

மைக்கேல் மார்ட்டின் வருகின்ற 2022 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருப்பார் என்றும் அதன் பிறகு பைன் கெயில் கட்சியின் தலைவர் லியோ வரட்கரிடம் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment