களுத்துறை பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) மூடப்பட்டிருந்த களுத்துறை வேணன் பெனாண்டோ மைதானத்தின் (Kalutara Vernon U Fernando Stadium) பூட்டுகளை உடைத்து உள்நுழைந்தமை தொடர்பில், மைதானத்தின் முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை, களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment