ஓமானிலிருந்து 288 பேர், ஹொங்கொங்கிலிருந்து 26 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

ஓமானிலிருந்து 288 பேர், ஹொங்கொங்கிலிருந்து 26 பேர் இலங்கை வருகை

இலங்கைக்கு வர முடியாமல், ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 288 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று, இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்விமானப் பயணிகளை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 206 எனும் விசேட விமானம், ஓமானின் மஸ்கட் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 

இவ்விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஹொங்கொங்கிலிருந்து இலங்கைக்கு வர முடியாமல் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் நேற்றிரவு (28) 9.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment