மாலைதீவிலிருந்து 179 பேருடன் வந்த விமானம் மத்தளயில் தரையிறங்கியது - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

மாலைதீவிலிருந்து 179 பேருடன் வந்த விமானம் மத்தளயில் தரையிறங்கியது

இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 179 பேர் இன்று (29) மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 4102 எனும் விசேட விமானத்தில், மாலைதீவின் மாலே விமான நிலையத்திலிருந்து இவ்விமானப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment