சீரற்ற காலநிலையால் இரத்தினபுரியில் இரு மரணங்கள் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

சீரற்ற காலநிலையால் இரத்தினபுரியில் இரு மரணங்கள் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (19) பகல் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

09 வயதுச் சிறுவனொருவனும் 30 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியின் வெவல்வத்த, உதுருகந்தே பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில், 09 வயதுச் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்தோடு, இரத்தினபுரியின் லேல்லுபிட்டிய பிரதேசத்திலுள்ள கடையொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த கடையில் நின்ற 30 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இரத்தினபுரியின் கஹன்கம வெல்அரம்பேவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, தாய் மற்றும் 24 வயதுடைய மகள் காயமடைந்ததை தொடர்ந்து அவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அவசர நிலை காரணமாக, அப்பிரதேசங்களில் பாதுகாப்பற்ற பகுதிகளிலுள்ள குடும்பங்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கவும், அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்கவும், பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், அனர்த்த நிலைமை தொடர்பில் பிரதேசவாசிகள் அவதானமாக இருக்குமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் உயிர் காப்பு அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment