இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று, இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 302 எனும் விசேட விமானம், இன்று காலை 7.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.
அத்தோடு கொரோனா தொற்று நோய் காரணமாக, சிங்கப்பூருக்குச் செல்ல முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த சிங்கப்பூர் பிரஜைகள் 10 பேர், இவ்விமானத்தில் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர்.
இவ்விமானம் இன்று மாலை 5.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
No comments:
Post a Comment