பிரேஸில் நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், ஜெனரல் ஒட்டேவியோ சந்தனா டோ ராகோ பரோஸ், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இத்தகவல் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகோ பரோஸ், திங்கட்கிழமையன்று கோவிட்-19 தொடர்பான சோதனை மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வெளிவந்த அது தொடர்பான பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment