உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 37 லட்சத்து 77 ஆயிரத்து 569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 41 ஆயிரத்து 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 901 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 12 லட்சத்து 75 ஆயிரத்து 296 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 61 ஆயிரத்து 205 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள்
அமெரிக்கா - 72,865
ஸ்பெயின் - 25,857
இத்தாலி - 29,684
இங்கிலாந்து - 30,076
பிரான்ஸ் - 25,531
ஜெர்மனி - 6,993
ரஷியா - 1,537
துருக்கி - 3,584
பிரேசில் - 7,966
ஈரான் - 6,418
சீனா - 4,633
கனடா - 4,043
இந்தியா - 1,694
பெரு - 1,444
பெல்ஜியம் - 8,339
நெதர்லாந்து - 5,204
ஈக்வடார் - 1,569
சுவிட்சர்லாந்து - 1,795
மெக்சிகோ - 2,507
ஸ்வீடன் - 2,941
அயர்லாந்து - 1,339
No comments:
Post a Comment