இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 186 பேர் இன்று (06) மாலை 4.45 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 303 எனும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தோரை, தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment